Tuesday, April 13, 2021

வாழ்க்கைப் பாதை

மவுனம் கலைந்து விட்டால்

மனதில் தெளிவு பிறந்து விடும்.

மனக்கதவைத் திறந்து வைத்தால்

மனக்கவலை மறைந்து விடும்.

 வாழ்க்கைப் பாதை, ஒரு அழகிய

விடுகதை பாடல்.

வாழும் வரையில்

விடை தெரியாத் தேடல் - கிடைத்த

விடையும் பலமுறை

விடுகதையாய் தோன்ற,

வாழ்க்கை பாதை பல முறை மாறும்.

வரும் மாற்றம் புரிந்து கொண்டால்,
வசந்த கால மலராய்

வாழ்க்கை என்றும் தொடரும்.

வாழும் பொழுது இனிமை பிறகும்.

கிருஷ்ணன்.

No comments:

Post a Comment